Reading out aloud, Tamil stories for kids. When we read to kids, they develop interest in reading, extend their attention span and stretch their imagination. Let our children explore the treasure.
…
continue reading
எல்லாரும் தான் தெய்வத்திடம் வேண்டுவாங்க. முனுமுனுமுனுன்னு நிறைய காசு வேணும், பணம் வேணும், நகை வேணும் இன்னும் என்னென்னல்லாமோ வேண்டுவாங்க. நஸ்ருதீன் ஹோட்ஜாவும் வேண்டுவார். ஆனா அவர் கொஞ்சம் வித்தியாசமா வேண்டுவார். கொஞ்சம் சத்தம் போட்டு வேண்டுவார். “தெய்வமே! எனக்கு ஆயிரம் தங்கக்காசுகள் வேணும். ஆயிரம் காசு. அதுக்கும் குறையா ஒரு காசு நீ கம்மியா குடுத்தால…
…
continue reading
ஒரு நாள் ராஜாவும் மந்திரியும் பேசிகிட்டு இருந்தாங்க. ராஜா மந்திரியிடம் நம்ம ராஜ்ஜியத்தில நிறைய மக்கள் பலவகையான தொழில் செய்றாங்க. எந்த தொழில் மிக பிரபலமாக இருக்கிறதுன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு. டாக்டரா? விவசாயியா? தொழிலாளியா? Government வேலையா? இத நீங்க கண்டுபிடிச்சி சொல்லுங்க ன்னார் . மந்திரியும் சரி ன்னார். சில நாள் கழிச்சு மந்திரி ராஜாகிட்ட வந்…
…
continue reading
ஒரு நாள், விவசாயி ஒருத்தர் தன் ஏர் கலப்பையைத் தோளில் தூக்கிக்கொண்டு தன் வயலுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போ ஒரு வேலியோரம் எதேர்ச்சையாகப் பார்வை பட, ஏதோ ஒன்று பெரிதாகக் கண்ணில் பட்டது. “இவ்ளோ பெருசா!” நம்ப முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தார். நன்றாக உருண்டு திரண்ட ஒரு பெரிய பரங்கிக்காய் அது. “இவ்ளோ பெரிய பரங்கிக்காய் நான…
…
continue reading
ஒரு இலையுதிர் காலத்துல சூரியனுக்கும் காற்றுக்கும் சண்டை வந்துச்சாம். நான் உன்னை விட வலிமையானவன்னு காற்று சூரியனைப் பார்த்து சொல்லிச்சாம். ம்ஹும் இல்லவே இல்லன்னு சூரியன் மென்மையா சொல்லிச்சாம். அப்ப அந்த பக்கமா போர்வை போர்த்திக்கிட்டு பயணி ஒருத்தர் நடந்து போய்ட்டு இருந்தத சூரியனும் காற்றும் பார்த்தாங்க. நம்ம ரெண்டு பேர்ல யார் பயணிக்கிட்ட இருந்து போர்…
…
continue reading
லட்சம் பறவைகள் ராஜா ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்கும். நாட்டு மக்கள் அவர்கிட்ட தினமும் புதுசு புதுசா கதை சொல்லிகிட்டே இருப்பாங்க. ராஜா அவங்ககிட்ட அப்புறம் என்னாச்சு? கதை அவ்ளோதானா? வேற கதை சொல்லுங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாரு! யாராலையும் மன்னரின் கதைப்பசிக்கு தீனி போட முடியல. அரசருக்கு நாட்டுல கதை சொல்றவங்க குறைஞ்சிட்டாங்களோ…
…
continue reading
எலி பொம்மை ஊர் தலைவரின் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மக்கள் எல்லோரும் விருந்துக்கு வந்திருந்தாங்க. அப்போ வீட்டுத் திண்னையில் எலி ஒண்ணு போறத பார்த்தாரு தலைவர். உடனே அவருக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோணுச்சு. அங்க இருந்த மக்கள்கிட்ட யார் தத்ரூபமா ஒரு எலி பொம்மைய செய்றாங்களோ அவங்களுக்கு 1000 ரூபாய் சன்மானம்ன்னு அறிவிச்சாரு. வேடிக்கையான யோசனைய…
…
continue reading
புஷ்டி லேகியம் ஒரு ஆடு. செவந்திப்பட்டில தான் அதோட வீடு. அந்த ஊருக்குப் பக்கத்துல ஒரு பெரிய காடு. பக்கத்து ஊர்ல இருக்க தன் சொந்தக்காரங்களைப் பாக்கப் போகணும்னா அந்தக் காட்டு வழியாத்தான் போகணும். அப்படி ஒருநாள், தன் சொந்தக்காரங்களைப் பாக்க, கையில குடம் நிறையத் தேன் எடுத்துட்டு, அந்தக் காட்டு வழியா ஆடு போயிட்டு இருந்துச்சு. அப்போ திடீர்னு, சொழுஞ்சொழுன்…
…
continue reading
…
continue reading
யார் உண்மையான குற்றவாளி என்று ராஜாவால் கண்டு பிடிக்க முடியவில்லை. ராணி விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அப்படி வழக்கு என்ன? வாங்க கேக்கலாம்..
…
continue reading
பிழைப்பிற்காக நகரம் செல்ல தீர்மானத்த ராமு வழியில் திருடர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவர்களிடமிருந்து தப்பித்தானா? அவன் கொண்டு சென்ற வைரம் என்னவானது? தெரிந்து கொள்ள இந்த கதையைக் கேளுங்கள்..
…
continue reading
பொழுது விடியுமுன்னே எழுந்து, பால் கறக்க வாளியைத் தூக்கிக்கொண்டு போனான் குப்பண்ணா. பட்டியில் போய்ப் பார்த்தால் பசுமாட்டைக் காணோம். சரி, கட்டு அவிழ்ந்துகொண்டு, அக்கம்பக்கத்து வயலில் போய் மேய்ந்துகொண்டிருக்கும் என்று தேடிப்பார்த்தான். அங்கேயும் காணவில்லை. பாவம் அவன்; ஏழை விவசாயி. ஒற்றைப் பசுமாட்டை வளர்த்து, அது தரும் பாலைக் கறந்து விற்றுத்தான் வருமானம…
…
continue reading
வினை விதைத்தவன் வினையறுப்பான் எனும் கருத்தில் அமைந்த, சிவா என்கிற ஒரு புத்திசாலி இளைஞனின் கதை.---கதை மூலம்: Tinkle Double Digest #006
…
continue reading
1
ஒரு குட்டி ஆட்டின் கதை - 33வது கதை
1:47
1:47
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:47
தன் தனித்துவத்தையும் வலிமையையும் அறிந்த ஒரு குட்டி ஆட்டின் கதை.
…
continue reading
கதை மூலம்: Tinkle Double Digest #006ல் வெளியான ஒரு படக்கதையின் தமிழாக்கம்.
…
continue reading
கரடி சொன்ன இரகசியம்அடர்ந்த காட்டு வழியே இரண்டு நண்பர்கள் நடந்துபோய்க் கொண்டிருந்தனர். திடீரென்று பெரிய கரடி ஒன்று எதிரே வருவதைப் பார்த்தனர். ஏய்! கரடி! கரடி! ஓடு! ஓடு! இருவரும் ஓட்டம் பிடித்தனர்.ஓடும்போது கால் இடறி ஒருவன் மட்டும் கீழே விழுந்துவிட, மற்றவன் ஓடி மரத்தில் ஏறிக்கொண்டான்.“டேய்! கால்ல அடிபட்டுருச்சுடா.. வந்து தூக்கிவிடுறா..” என்று விழுந்த…
…
continue reading
1
ஆற்று நீர் உனதா எனதா? - 30வது கதை
5:47
5:47
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
5:47
ஒரு ராஜா இருந்தார். அப்பப்போ அவர் ஏதாவது முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துவிடுவார். அது நாட்டு மக்களுக்கு பெரும் கேடாக முடியும். அவருக்கு அமைந்த மந்திரி நல்ல அறிவாளி. ராஜாவிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது மந்திரி தான். இப்படியாகப் போய்க்கொண்டிருந்தது.ஒரு கோடைக்கால இரவு. தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்துக்கொண்டிருந்தார் ராஜா. மணிக்கூண்டிலிருந்து ‘த…
…
continue reading
1
ஓங்கி அடிக்க ஒண்ணரை காசு - 29வது கதை
2:04
2:04
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
2:04
ஓங்கி அடிக்க ஒண்ணரை காசு சுமார் ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர், இன்றைக்கு துருக்கி என்று வழங்கப்படுகின்ற தேசத்தில் வாழ்ந்தவர் நஸ்ருதீன் ஹோட்ஜா. அவர் ஒரு சூஃபி ஞானி. அவர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான நிகழ்வு இது. ஒருநாள் மதிய நேரம், ஹோட்ஜா தெருவின் ஓரமாக நடந்துபோய்க் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் ஹோட்ஜாவின் பின்னால் வந்து அவர் முதுகில் ஓங்கி …
…
continue reading
முயல் விடு தூதுஹாசன் ஒருநாள் மிகவும் வருத்தமாக இருந்தார். வியாபாரி எஸ்தி ஹாசனுக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டார். எப்படியும் ஒருநாள் தன் பணத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று உறுதியாக இருந்தான் ஹாசன்.வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார். அவரைக் கண்டதும் அவரது மனைவி அவரை வரவேற்று, “வந்துவிட்டீர்கள்! உங்களுக்குத்தான் காத்திருந்தேன்! உங்கள் ந…
…
continue reading
1
பூனைக்கு மணி கட்டுவது யார்? - 27வது கதை
2:07
2:07
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
2:07
பூனைக்கு மணி கட்டுவது யார்?எலியூர் என்ற ஊர் இருந்தது. அங்கே நிறைய எலிகள் ஒன்றாக அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தன. அப்போது திடீரென்று பூனை ஒன்று ஊருக்குள் வந்துவிட்டது. நிம்மதியாக வாழ்ந்து வந்த எலிக் குடும்பங்கள் இப்போது கலங்கி நின்றன. பூனை எப்போது தன்னையோ தன் குடும்பத்தாரையோ பிடித்துத் தின்னுமோ என்று எல்லா எலிகளும் அஞ்சின.இதற்குத் தீர்வ…
…
continue reading
1
அந்தக் காட்டிலே என்ன இருக்கிறது? - 26வது கதை
1:36
1:36
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:36
அந்தக் காட்டிலே என்ன இருக்கிறது? ஒரு ஊரில் மீனா என்ற சுட்டிப் பெண் இருந்தாள். அவள் நல்ல புத்திசாலிப் பெண். அவள் ஊருக்கு மேற்கே ஒரு அடர்ந்த காடு இருந்தது. மீனாவுக்கு அந்தக் காட்டினுள்ளே அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் அந்தக் காட்டிற்குள் போக வேண்டாமென அவளது பெற்றோர் எச்சரித்திருந்தனர். ஒருநாள் மீனாவின் பெற்றோர் அடுத்த ஊரில் உள…
…
continue reading
தன்னம்பிக்கை ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதைவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்துகொள்ள முன் வந்தான். “போட்டியில் தோற்றுவிட்டால் கைகள…
…
continue reading
1
தீய பழக்கங்கள் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை
1:54
1:54
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:54
தீய பழக்கங்கள் ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் அதிக தீய பழக்கங்கள் கொண்டவனாக விளங்கினான்; அவனை திருத்த எவ்வளவோ முயன்றும் அந்த தொழிலதிபரால் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால், அவர் ஒரு வயது முதிர்ந்த ஞானியிடம் தனது பையனைத் திருத்த உதவி கேட்டார்.அந்த ஞானியும் ஒப்புக்கொண்டு அத்தொழிலதிபரின் பையனை சந்தித்து நடை பயணம் மேற்கொள்ள அழைத்து சென்றார். அச்சமயம் அவர்…
…
continue reading
1
யானையும் எறும்பும் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை
1:00
1:00
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:00
யானையும் எறும்பும்ஒரு காட்டில், ஒரு யானையும் எறும்பும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டே காலாற மலைஉச்சி வரை நடந்தன. அப்போது அந்த யானை எறும்பிடம் ஜம்பமாக “நான் பலமாக மூச்சு விட்டால் கூட நீ பறந்து போவாய்” என்று ஏளனமாகக் கூறிச் சிரித்தது. அந்த யானைக்கு எப்போதுமே தான் வலியவன் பெரியவன் என்ற தலைக்கனம் இருந்தது.திடீரென்று அப்போது பூ…
…
continue reading
1
கட்டை விரலும் மற்ற விரல்களும் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை
0:49
0:49
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:49
கட்டை விரலும் மற்ற விரல்களும் ஒருமுறை, எல்லா விரல்களும் கட்டை விரலுக்குப் போட்டியாகச் சேர்ந்து கொண்டன. தங்களைவிட கட்டை விரல் உயரம் குறைவாகவும் பருமனாகவும் இருப்பாதாகக் கூறி கேலி செய்தன. அதைக் கண்டு வருந்திய கட்டை விரல், இனி மற்ற விரல்களுடன் சேரக் கூடாதென எண்ணித் தனித்து அசையாமல் நின்றுகொண்டது. கை எதையாவது எழுதவோ பிடிக்கவோ முயன்றபோது கட்டைவிரலின்றி …
…
continue reading
1
கோபக்கார அரக்கன் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை
1:18
1:18
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:18
கோபக்கார அரக்கன் முன்னொரு காலத்தில், கோபக்கார அரக்கன் ஒருவன் இருந்தான். சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவான் அவன். கோபம் வந்தால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. ஒருநாள், அவன் தனக்கென ஒரு அழகான மரவீடு கட்டிக்கொள்ள ஆசைப்பட்டான். வீடு கட்ட, அந்தக் காட்டிலே உயரமாக வளர்ந்திருந்த மரத்தைத் தேர்ந்தெடுத்தான். பத்து நாட்கள் கடினமாக உழைத்து வீட…
…
continue reading
1
ஐஸ்கிரீம் என்னாச்சு? - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை
0:44
0:44
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:44
ஐஸ்கிரீம் என்னாச்சு? துளசி என்றொரு பெண் இருந்தாள். ஒருநாள், அவள் தன் நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கழைத்து ஐஸ்கிரீம் விருந்தளிக்க ஆசைப்பட்டாள். ஐஸ்கிரீம் செய்வதெப்படி என்று தன் தந்தையிடம் கேட்டறிந்து, தயாரித்து, அது உறைய ஃப்ரீசரில் வைத்தாள். சில நிமிடங்களிலேயே, பொறுமையிழந்தவளாய் ஃப்ரீசரைத் திறந்து ஐஸ்கிரீம் உறைந்துவிட்டதா என்று பார்த்தாள். அதெப்படி …
…
continue reading
1
பேனாவும் பென்சிலும் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை
0:37
0:37
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:37
பேனாவும் பென்சிலும் ஒரு நாள், ஒரு பேனாவும் பென்சிலும் அருகருகே ஒரு மேஜையில் அமர்ந்திருந்தன. முன்மாலை நேரம், இருவரும் வேலை எதுவுமின்றி ஓய்வாகப் பேச ஆரம்பித்தனர். பேனா பென்சிலிடம் கேட்டது, “ஒவ்வொருமுறை உன்னை யாரேனும் பயன்படுத்தும் போதும் நீ தேய்கிறாயே, உனக்கு வருத்தமாக இல்லையா?” என்று. “முதலில் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. பின், என்னைக் கொண்டு அவ…
…
continue reading
1
ஃபில்லின் புன்னகை - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை
0:48
0:48
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:48
ஃபில்லின் புன்னகைஃபில் என்ற ஒரு பையன் இருந்தான். அவனுக்கு சந்தோஷமாகச் சிரிப்பது பிடிக்கும். எல்லோரைப் பார்த்தும் அவன் புன்சிரிப்பு சிரிப்பதுண்டு.கிறிஸ்துமஸ் தினத்து முதன்நாள், சாண்டா கிளாஸ் அவர்கள் பரிசுகளை அனைவருக்கும் கொடுப்பதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். துரதிஷ்டவசமாக, சாண்டா அவரது சிரிப்பைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தார். எங்கே வைத்தார் என்ற…
…
continue reading
1
அடம்பிடித்தவள் - கதைசொல்லி - ஒரு நிமிடக்கதை
0:40
0:40
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:40
அடம்பிடித்தவள் ஒருநாள் காலை, வானில் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தன. பள்ளிக்குச் செல்லும்போது குடையை எடுத்துச் செல்லுமாறு அவளுக்கு அறிவுறுத்தினாள் அம்மா. அதற்கு அவள், “மழையில் நனைந்தால் என்ன, சட்டென உடைகள் காய்ந்துபோகும். கவலை வேண்டாம், அம்மா” என்றாள். தாய் கூறியது போலவே மழை பெய்தது. அவளும் நனைந்து விட்டாள். நாள் முழுதும் ஈர உடையிலே இருந்தாள். காய…
…
continue reading
1
சுண்டெலிக் கல்யாணம் - அழ. வள்ளியப்பா - பஞ்ச தந்திரக் கதை
2:37
2:37
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
2:37
வெகு காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு, விஷ்ணு சர்மா என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் ஒரு கதையே இது. தமிழில் ஆக்கியது அழ. வள்ளியப்பா திருநெல்வேலி எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், குழந்தைகள் தினத்தன்று (14 நவம்பர் 1962) பதிப்பித்தது.
…
continue reading
1
முத்து மாலை - அழ. வள்ளியப்பா - பஞ்சதந்திரக் கதை
1:11
1:11
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:11
வெகு காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு, விஷ்ணு சர்மா என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் ஒரு கதையே இது. தமிழில் ஆக்கியது அழ. வள்ளியப்பா திருநெல்வேலி எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், குழந்தைகள் தினத்தன்று (14 நவம்பர் 1962) பதிப்பித்தது.
…
continue reading
1
நான்கு நண்பர்கள் - அழ. வள்ளியப்பா - பஞ்சதந்திரக் கதை
3:30
3:30
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
3:30
வெகு காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு, விஷ்ணு சர்மா என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் ஒரு கதையே இது. தமிழில் ஆக்கியது அழ. வள்ளியப்பா திருநெல்வேலி எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், குழந்தைகள் தினத்தன்று (14 நவம்பர் 1962) பதிப்பித்தது.
…
continue reading
1
வித்தைப் பாம்பு - அழ வள்ளியப்பா - சிறுகதை
8:53
8:53
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
8:53
வித்தைப் பாம்பு கதை மூலம்: லயிக் ஃபுடேஹள்ளி தமிழில்: அழ. வள்ளியப்பா ‘பாம்புக்குப் பகை கீரி’ என்று பாடப் புத்தகத்திலே படித்திருக்கிறோம். ஆனால், பாம்பும் கீரியும் விளையாட்டுச் சண்டை போடும் வித்தையை நேரில் பார்த்திருக்கிறீர்களா? ராகி என்று ஒரு நல்லப் பாம்பு. அது நல்ல நல்ல வித்தைகளெல்லாம் செய்யும். அதைப் பார்த்துக் குழந்தைகள் ஆனந்தம் அடைவார்கள். அவர்கள…
…
continue reading
1
ஒற்றுமையே வலிமை - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
1:03
1:03
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:03
ஒற்றுமையே வலிமை வயது முதிர்ந்த விவசாயி ஒருவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அந்த நால்வரும் ஒற்றுமை இல்லாமல், எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர். இவர்கள் இப்படியே இருந்தால், குடும்பம் சிதறிப் போகுமே என்று வருந்தினார் வயதான தந்தை. அவர் கூறிய புத்திமதிகளை மதிக்காமல் திரிந்தனர். ஒருநாள் மக்கள் நால்வரையும் அழைத்தார் தந்தை. அவர்கள் வந்து கட்டிலைச்…
…
continue reading
1
எளியவர்களால் உதவ முடியும் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக்கதை
1:16
1:16
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:16
எளியவர்களால் உதவ முடியும் செடி, கொடி, மரங்கள் அடர்ந்த பெரிய காடு. அங்கு ஆண் சிங்கம் ஒன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது சுண்டெலி ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தின் மேல் ஏறி விளையாடியது. அதனால் சிங்கத்தின் தூக்கம் கலைந்தது. சினம் பொங்கியது, கண்கள் சிவந்தன. சுண்டெலியைக் கடுமையாகப் பார்த்தது. சுண்டெலி அஞ்சி நடுங்கியது. சிங்கத்தின் காலட…
…
continue reading
1
தங்கையின் பரிவு - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
0:53
0:53
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:53
தங்கையின் பரிவு அக்காளும் தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை உண்டாகும். ஒரு நாள் இருவருக்கும் சச்சரவு அதிகமாயிற்று. அப்பொழுது தங்கையின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அடி அடி என்று பலமாக அடித்து விட்டாள் அக்காள். அதை அறிந்த பெற்றோர் அவளைத் திட்டி, ஒரு அறையில் தள்ளி, பூட்டி வைத்தனர். மேலும், அவளுக்குப் பகல…
…
continue reading
1
நிலத்தில் கிடைத்த மோதிரம் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
0:56
0:56
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:56
நிலத்தில் கிடைத்த மோதிரம் ஒரு பண்ணையாருக்குச் சொந்தமான நிலத்தில் கூலிக்காக ஒரு ஏழை உழுது பயிரிட்டு வந்தான். வழக்கம் போல விவசாயி உழுது கொண்டிருக்கும்போது, ஒரு தங்க மோதிரத்தைக் கண்டு எடுத்தான். வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து விட்டான். தான் கண்டு எடுத்த மோதிரத்தை தன் மனைவியிடம் காட்டினான். அதைப் பார்த்ததும் அவன் மனைவி, தனக்குக் காதோலை செய்து போட்டு…
…
continue reading
1
ஏமாந்த சகோதரர்கள் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
1:20
1:20
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:20
ஏமாந்த சகோதரர்கள் ஒரு ஊரில் இரண்டு வாலிபர்கள் முரட்டுத்தனமாக சச்சரவிட்டு, அடிதடியில் இறங்கி விட்டனர். வழியில் சென்ற ஒருவர் அவர்களை விலக்கிவிட்டு, “எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். “நாங்கள் இருவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். எங்கள் தந்தை ஒரு முனிவர். அவர், மிகச் சிறப்பு வாய்ந்த மூன்று பொருள்களை வைத்துவிட்டு மறைந்துவிட்…
…
continue reading
1
செத்த எலியால் வியாபாரி ஆனான் - முல்லை முத்தையா - ஒரு குட்டிக் கதை
3:12
3:12
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
3:12
செத்த எலியால் வியாபாரி ஆனான் சிறிய நகரம் ஒன்றில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவன் பெற்றோர் இறந்து விட்டனர். உறவினர் எவரும் இல்லை. குடியிருக்க சிறிய வீடு மட்டும் இருந்தது. வேலையும் கிடைக்க வில்லை. ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்றால், பணமும் இல்லை. அவனிடம் அனுதாபம் கொண்ட ஒருவர், ஒரு யோசனை கூறினார்: “பக்கத்த…
…
continue reading
1
பெரிய வாயாடி - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
1:17
1:17
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:17
பெரிய வாயாடி ஒரு ஊரில் ஒரு பிராமணரும் அவர் மனைவியும் வாழந்து வந்தனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தனர். அவர் புரோகிதர் வேலைக்குச் செல்வார். அந்த வேலை கிடைக்காத போது, சமையல் வேலை பார்ப்பதும் உண்டு. அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவருடைய மனைவி பெரிய வாயாடி. யாரிடமாவது ஏதேனும் பேசி, வம்பளத்துக் கொண்டிருப்பாள். அதனால் அவளுடன் யாருமே பேசுவது இல்லை. கணவ…
…
continue reading
1
தவறு யாருடையது? - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
1:03
1:03
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:03
தவறு யாருடையது? அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய அறையில் இருந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அப்போது, பாலைக் கொண்டுவந்து அவர் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றார் அவருடைய மனைவி. அதிகாரி அதைக் கவனிக்காமல் எழுதிக்கொண்டிருந்தார். அப்பொழுது, கல்லூரியில் படிக்கும் அவர்களுடைய மகள் ஏதோ ஒரு புத்தகதை எடுப்பதற்குச் சென்றாள். மேஜை ம…
…
continue reading
1
பணத்தைச் சேமித்தது எப்படி? - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
1:00
1:00
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:00
பணத்தைச் சேமித்தது எப்படி? --- பெரியவர் ஒருவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவனுக்கு வருவாய் கிடைக்க வழியையும் ஏற்படுத்தி, தனிக் குடித்தனம் அமைத்து கொடுத்தார். அவ்வப்போது வந்து மகனைப் பார்த்துச் செல்வார் தந்தை. ஒருநாள் தந்தை வந்திருந்தார். இரவு நேரம், தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர். "அப்பா! நீங்கள் எப்படி பணத்தைச் சேர்த்தீர்கள்?…
…
continue reading
1
உதவியும் ஒத்துழைப்பும் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
1:10
1:10
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
1:10
உதவியும் ஒத்துழைப்பும் - முல்லை முத்தையா அவர்கள் எழுதிய 'மாணவர் மானவியர்களுக்கு நீதிக்கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து.
…
continue reading
1
விவசாயி அடைந்த வருத்தம் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
0:50
0:50
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:50
விவசாயி அடைந்த வருத்தம் - இக்கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதி மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் என்ற நூலில் உள்ளது.
…
continue reading
1
பண்புள்ள பையன் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
0:51
0:51
Redă mai târziu
Redă mai târziu
Liste
Like
Plăcut
0:51
பண்புள்ள பையன் - இந்த ஒரு நிமிடக் கதை முல்லை பி. எல். முத்தையா அவர்கள் எழுதிய "மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்" என்ற நூலில் உள்ளது.
…
continue reading